போக்குவரத்து விதியை மீறினால் காப்பீட்டு பிரீமியம் அதிகரிக்கும் போக்குவரத்து விதியை மீறினால் காப்பீட்டு பிரீமியம் அதிகரிக்கும் ...  ‘நிடி ஆயோக்’ பட்டியலில் தமிழகம் 3வது இடம் ‘நிடி ஆயோக்’ பட்டியலில் தமிழகம் 3வது இடம் ...
முதலீட்டு விதிகளில் மாற்றம்: அமேசானுக்கு நெருக்கடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2021
21:24

புதுடில்லி:அன்னிய முதலீடுகள் குறித்த விதிமுறைகளை மாற்றி அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும்பட்சத்தில், 'அமேசான்' உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என கருதப்படுகிறது.

மேலும், அவை தங்களுடைய விற்பனையாளர்களுடனான கூட்டை, மறுசீரமைக்க வேண்டிய நிலையும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து, உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:அன்னிய முதலீட்டுக்கான விதிகளை மாற்றி அமைப்பது குறித்து, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

அண்மைக்காலமாக, உள்நாட்டு சில்லரை விற்பனையாளர்கள், அமேசான், 'வால்மார்ட்' உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, தொடர்ந்து புகார்களை தெரிவித்து வருகின்றனர்.வெளிநாட்டு மின்னணு வர்த்தக நிறுவனங்கள், வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்களை இணைக்கும் ஒரு சந்தையாக மட்டுமே செயல்பட இந்தியா அனுமதித்துஉள்ளது.

பொருட்களை சேர்த்து வைக்கவோ, அவற்றை நேரடியாக விற்பனைக்கு விடுக்கவோ அவற்றுக்கு அனுமதி கிடையாது.மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள், அவை நேரடியாக பங்கு முதலீடு செய்திருக்கும் விற்பனையாளர்களின் பொருட்களை விற்கவும் தடை விதிக்கப்பட்டது.

இப்போது அடுத்தகட்டமாக, இத்தகைய மின்னணு வர்த்தக நிறுவனங்கள், நேரடியாக இல்லாமல் மறைமுகமாக தங்களின் தாய் நிறுவனங்கள் மூலம் விற்பனையாளர்களின் பங்குகளை வைத்திருந்தாலும், அந்த தயாரிப்புகளை விற்பனை செய்யக்கூடாது என மாற்றம் செய்யப்பட உள்ளது.

இப்படி ஒரு மாற்றத்தை அரசு செய்யும்பட்சத்தில் அமேசான் மிகவும் பாதிக்கப்படும். காரணம், இந்நிறுவனம், இரண்டு மிகப் பெரிய, 'ஆன்லைன்' விற்பனையாளர்களின் பங்குகளை மறைமுகமாக வைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து, அமேசான் தரப்பில், 'அன்னிய முதலீடுகளில் பெரியளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால், அது நாட்டின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)