பதிவு செய்த நாள்
22 ஜன2021
21:56
புதுடில்லி:அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள தன்னுடைய பங்குகளை 50 சதவீதத்துக்கும் கீழே இருக்குமாறு குறைத்துக்கொள்ள வேண்டும் என தொழிலகங்களின் கூட்டமைப்பான சி.ஐ.ஐ., தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:அரசாங்கம் அடுத்த ஓராண்டுக்குள் நான்கு அல்லது மூன்று மிகப் பெரிய வங்கிகளை தவிர்த்து மற்ற நிறுவனங்களில் தன்னுடைய பங்குகளை 50 சதவீதத்துக்கும் கீழே குறைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் பெரிய வங்கிகளுக்கான மனித வள கொள்கைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் அந்நிறுவனங்களும் தனியார் துறை வங்கிகளின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.வங்கிகளுக்கு தேவையான ஊழியர்களை நியமிப்பது, அவர்களை தக்க வைத்துக் கொள்வது, திறமைகளை அதிகரிப்பது ஆகியவற்றுக்காக சுதந்திரமான மனிதவள கொள்கைகள் அவசியம்.இவ்வாறு சி.ஐ.ஐ., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|