தடை விலகாது என்பதால் ஆட்களை குறைக்கும்,‘டிக்டாக்’தடை விலகாது என்பதால் ஆட்களை குறைக்கும்,‘டிக்டாக்’ ... ஆப்பிள் நிறுவன விற்பனை இந்தியாவில் இருமடங்கு அதிகரிப்பு ஆப்பிள் நிறுவன விற்பனை இந்தியாவில் இருமடங்கு அதிகரிப்பு ...
தங்க கடத்தல் மேலும் அதிகரிக்கும் உலக தங்க கவுன்சில் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2021
02:09

மும்பை:கடந்த ஆண்டில், இந்தியாவில், தங்கத்தின் தேவை, 35.34 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டிருப்பதாகவும், நடப்பு ஆண்டில், தேவை மீண்டும் அதிகரிக்கும் என்று கருதுவதாகவும், உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.

உலகளவிலான தங்கத்தின் தேவையும் கடந்த ஆண்டில், 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், இத்தகைய சூழலில், இறக்குமதி வரியை குறைக்காவிட்டால், கடத்தல் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கவுன்சிலின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இந்தியாவில், கொரோனா காரணமான ஊரடங்குகள், இதுவரை இல்லாத அளவிலான விலை அதிகரிப்பு, ஆகிய காரணங்களால் தங்கத்தின் தேவை, கடந்த ஆண்டில், 446.4 டன் ஆக குறைந்து விட்டது. கடந்த, 2019ல், இது, 690.4 டன் ஆக இது இருந்தது.

ஊரடங்கின் காரணமாக, ஆபரணங்களின் தேவையும், 42 சதவீதம் குறைந்துள்ளது. ஆபரணங்களின் தேவை குறைந்ததன் தொடர்ச்சியாக, நாட்டின் மொத்த தங்க இறக்குமதியும், 47 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

கடந்த 2019ல், 646.8 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டில், 344.2 டன் மட்டுமே இறக்குமதி ஆகியுள்ளது.

இருப்பினும், தற்போது ஊரடங்கு உத்தரவுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, இயல்பான நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. கடந்த காலாண்டில் தங்கத்தின் இறக்குமதி, 19 சதவீதம் அதிகரித்துள்ளது இதற்கு சாட்சி.

சந்தை குறியீடுகள் மிகவும் அதிகரித்திருப்பது, வட்டி விகிதம் குறைந்துள்ளது ஆகிய காரணங்களால், தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரிக்க துவங்கி இருக்கிறது.

அடுத்த சில ஆண்டுகளுக்கு, தங்கத்தின் தேவையில், வலுவான முன்னேற்றத்தை காணமுடியும். இது போன்ற சூழலில், தங்கத்தின் இறக்குமதிக்கு அதிக வரி வசூலிப்பது, கடத்தலை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது. எனவே, இறக்குமதி வரியை குறைக்க வேண்டியது அவசியம்.

நடப்பு ஆண்டின் பிற்பாதியில், தேவை அதிகரிப்பு தொடரும்பட்சத்தில், இறக்குமதியும் அதிகரித்து, இயல்புக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)