பதிவு செய்த நாள்
23 பிப்2021
21:07
புதுடில்லி:இந்தியா – மொரீஷியஸ் இடையே தாராள வர்த்தக ஒப்பந்தம் கையொப்பமாகி உள்ளது. இதன் மூலம், இந்தியா ஏற்றுமதி செய்யும், 300க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு, மொரீஷியசில், சுங்க வரிச் சலுகை கிடைக்கும்.
இது குறித்து மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் முன்னிலையில், இந்தியா – மொரீஷியஸ் ஒருங்கிணைந்த பொருளா தார கூட்டுறவு ஒப்பந்தம் கையொப்பமானது. இந்தியா, ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஒரு நாட்டுடன் இதுபோன்ற தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்வது இதுவே முதல் முறை.
இதன் மூலம், இந்தியாவில் இருந்து மொரீஷியசுக்கு ஏற்றுமதியாகும், ஜவுளி, வேளாண் விளை பொருள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட, 300க்கும் அதிகமான பொருட்களுக்கு, சுங்க வரிச் சலுகை கிடைக்கும். அதுபோல, மொரீஷியசில் இருந்து, இறக்குமதியாகும் உறைநிலை மீன், உயர்தர சர்க்கரை, பிஸ்கட், பழங்கள், சோப்பு, மது வகைகள், மருத்துவ சாதனங்கள் போன்ற, 615 பொருட்கள் சுங்க வரிச் சலுகை பெறும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|