பதிவு செய்த நாள்
04 மார்2021
20:57
புதுடில்லி:சென்னையில் வீடுகள் விற்பனை, நடப்பு ஆண்டில், 30 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என்றும்; விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும், சொத்து தரகு நிறுவனமான, ‘பிராப்டைகர்’ தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:குறைந்து வரும் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம், மற்றும் பொருளாதார மீட்சி ஆகிய காரணங்களால், தேவை அதிகரித்து வருகிறது. வீடுகளுக்கான தேவை, கிட்டத்தட்ட, 2019ம் ஆண்டு நிலைக்கு உயர்ந்து வருகிறது.
புதிய வீடுகளை பொறுத்தவரை, கடந்த ஆண்டு எண்ணிக்கையான, 12 ஆயிரத்து, 380 வீடுகள் என்பதை எளிதாக இந்த ஆண்டு நிறைவுக்கு முன்னதாகவே எட்டிவிட முடியும்.வீடு கட்டுவதற்கான பொருட்களின் விலை அதிகரித்திருப்பதால், வீடுகளின் விலையை குறைப்பது என்பது கட்டுமான நிறுவனங்களுக்கு ஒரு சவாலாகவே இருக்கும். எனவே விலை, 5 சதவீதம்வரை அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|