பதிவு செய்த நாள்
05 மார்2021
20:57
புதுடில்லி:‘கெய்ர்ன்’ நிறுவன விவகாரத்தையொட்டி, வரி விஷயங்களில் மேல்முறையீட்டுக்கு செல்வது என்பது, தன்னுடைய கடமை என, மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த, கெய்ர்ன் நிறுவனம், வரி சம்பந்தமாக, இந்தியாவுக்கு எதிராக தொடுத்த வழக்கில், சர்வதேச தீர்ப்பாயம், அதற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது.மேலும், இந்திய அரசு, கெய்ர்ன் நிறுவனத்துக்கு,10 ஆயிரத்து, 247 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
மேல்முறையீடு
இந்த தீர்ப்பை மதித்து, இழப்பீட்டு தொகையை தரவில்லை என்றால், இந்தியாவின் சொத்துக்களை பறிமுதல் செய்வோம் என, கெய்ர்ன் நிறுவனம் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன், இந்திய அரசு, இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் என, குறிப்பால் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:வரி விவகாரத்தில் நாங்கள் எங்கள் நிலையில் தெளிவாக இருக்கிறோம். 2014ம் ஆண்டிலிருந்து இன்றுவரை, அதை திரும்ப திரும்ப சொல்லி வருகிறோம். இதில் எந்த குழப்பமும் கிடையாது.வரி விதிப்பது குறித்த இந்தியாவின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டால், நான் முறையீடு செய்வேன். அது என் கடமை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூன்று முறை
கெய்ர்ன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைமன் தாம்சன் மற்றும் உயர் அதிகாரிகள், அண்மையில் நிதியமைச்சக அதிகாரிகளை, மூன்று முறை சந்தித்த பின், நிதியமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, இந்தியா, மேல்முறையீட்டுக்கு செல்லும் என கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|