பதிவு செய்த நாள்
06 மார்2021
20:29
புதுடில்லி:பொருளாதார மீட்சி குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் நிறுவனங்கள் இருப்பது, ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட, 71 சதவீத நிறுவன தலைவர்கள், நாட்டின் பொருளாதார மீட்சி குறித்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும்; இது, உலக சராசரியை விட அதிகமாகும் என்றும், ‘கிரான்ட் தார்ன்டன் இண்டர்நேஷனல்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் ஆய்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:உலகளவில், 57 சதவீத நிறுவன தலைவர்கள், நடப்பு ஆண்டில் பொருளாதாரம் மீட்சி காணும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆனால் இது, இந்தியாவில் 71 சதவீதமாக உள்ளது. நடப்பு ஆண்டில், ஏற்றுமதி அதிகரிக்கும் என, 61 சதவீத தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
உள்கட்டுமான திட்டங்களில் அதிகரிக்கும் முதலீடுகள், நிறுவன வரி குறைப்பு, ‘சுய சார்பு இந்தியா’ திட்டம் ஆகியவை காரணமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்றும் நிறுவன தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|