உணவு பதப்படுத்தும்  துறையினர் வரவேற்பு உணவு பதப்படுத்தும் துறையினர் வரவேற்பு ...  ‘சிங்காரி’ வீடியோ செயலியில் சல்மான் கான் முதலீடு ‘சிங்காரி’ வீடியோ செயலியில் சல்மான் கான் முதலீடு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கச்சா எண்ணெய் இறக்குமதி: மத்திய அரசு அறிவுறுத்தல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2021
20:25

புதுடில்லி:சவுதி அரேபியா, அதன் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்துக் கொண்ட நிலையில், அந்நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தங்களை மறு ஆய்வு செய்யுமாறு, பொதுத்துறை சுத்திகரிப்பு நிறுவனங்களை அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது.

இது குறித்து, அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியா, அதன் எண்ணெய் தேவையில், 85 சதவீதத்தை இறக்குமதியை நம்பி இருக்கிறது. எனவே, உலகளவிலான சப்ளை மற்றும் விலை நம்மை பாதிப்பதாக அமைந்துவிடுகிறது.கடந்த பிப்ரவரியில், சவுதி அரேபியா எண்ணெய் உற்பத்தியை குறைத்துக்கொண்டது. இதனால், இந்தியா இப்போது அதன் தேவைக்காக வேறு நாடுகளின் பக்கம் திரும்ப வேண்டியதாகிவிட்டது.இதையடுத்து, பொதுத்துறை நிறுவனங்களான, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள், மத்திய கிழக்கு பகுதிக்கு வெளியே கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், கூட்டு பேரம் மூலம், குறைந்த விலைக்கு வாங்குவது குறித்தும் ஆலோசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.பொதுவாக, சவுதி அரேபியா மற்றும் எண்ணெய் உற்பத்தி வளைகுடா நாடுகள் ஆகியவற்றிலிருந்து தான் எண்ணெய் வாங்குவது வழக்கம். ஆனால், அவற்றில் தற்போது கட்டுப்பாடுகள் வாங்குபவர்களுக்கு எதிராக இருக்கிறது. இதையடுத்தே, அரசு தரப்பிலிருந்து இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)