சிறு நிறுவனத்திற்கும், மியூச்சுவல் பண்டு: ‘தினமலர்’ நிகழ்ச்சி சிறு நிறுவனத்திற்கும், மியூச்சுவல் பண்டு: ‘தினமலர்’ நிகழ்ச்சி ...  நேரடி வரி வருவாய் ரூ.9.45 லட்சம் கோடி நேரடி வரி வருவாய் ரூ.9.45 லட்சம் கோடி ...
குத்தகையில் அலுவலக இடம் பெறுவதில் ஆர்வம் குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2021
20:43

மும்பை:கொரோனா காரணமாக, நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில், அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுப்பதில், நிறுவனங்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.

இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, ஜே.எல்.எல்., இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தாண்டு, ஜன – மார்ச் வரை, சென்னை, மும்பை உள்ளிட்ட ஏழு முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் அமைக்க, 55.30 லட்சம் சதுர அடி பரப்பிற்கு குத்தகை ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 86 லட்சம் சதுர அடியாக உயர்ந்திருந்தது.

அதிகபட்சமாக, பெங்க ளூருவில், குத்தகைக்கு பெறப்பட்ட அலுவலக இடம், 27 லட்சத்தில் இருந்து, 22 லட்சம் சதுர அடியாக குறைந்துள்ளது. மும்பையில், 21 லட்சத்தில் இருந்து, 2 லட்சம் சதுர அடியாக வீழ்ச்சி கண்டுள்ளது. சென்னையில், குத்தகைக்கு பெறப்பட்ட அலுவலக இடம், 9 லட்சத்தில் இருந்து, 4 லட்சம் சதுர அடியாக குறைந்துள்ளது. டில்லி தலைநகர் பிராந்தியத்தில், 15 லட்சத்தில் இருந்து, 11 லட்சம் சதுர அடியாக சரிந்துள்ளது.

அதே சமயம், ஐதராபாத்தில், குத்தகைக்கு பெறப்பட்ட அலுவலக இடம், 9 லட்சத்தில் இருந்து, 11 லட்சம் சதுர அடி; கோல்கட்டாவில், 20 ஆயிரத்தில் இருந்து, 40 ஆயிரம் சதுர அடியாக உயர்ந்துள்ளது. புனே நகரிலும், 4 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் சதுர அடி என்ற வகையில் குத்தகை அலுவலகங்கள் அதிகரித்துள்ளன. அதே சமயம், மதிப்பீட்டு காலாண்டில், ஏழு முக்கிய நகரங்களில், வாடகை அலுவலகங்களுக்கான தேவை, ஏற்ற இறக்கமின்றி சீராக காணப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)