பதிவு செய்த நாள்
09 ஏப்2021
20:43
மும்பை:கொரோனா காரணமாக, நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில், அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுப்பதில், நிறுவனங்களிடம் ஆர்வம் குறைந்துள்ளது.
இது குறித்து, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, ஜே.எல்.எல்., இந்தியா வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தாண்டு, ஜன – மார்ச் வரை, சென்னை, மும்பை உள்ளிட்ட ஏழு முக்கிய நகரங்களில் அலுவலகங்கள் அமைக்க, 55.30 லட்சம் சதுர அடி பரப்பிற்கு குத்தகை ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில், 86 லட்சம் சதுர அடியாக உயர்ந்திருந்தது.
அதிகபட்சமாக, பெங்க ளூருவில், குத்தகைக்கு பெறப்பட்ட அலுவலக இடம், 27 லட்சத்தில் இருந்து, 22 லட்சம் சதுர அடியாக குறைந்துள்ளது. மும்பையில், 21 லட்சத்தில் இருந்து, 2 லட்சம் சதுர அடியாக வீழ்ச்சி கண்டுள்ளது. சென்னையில், குத்தகைக்கு பெறப்பட்ட அலுவலக இடம், 9 லட்சத்தில் இருந்து, 4 லட்சம் சதுர அடியாக குறைந்துள்ளது. டில்லி தலைநகர் பிராந்தியத்தில், 15 லட்சத்தில் இருந்து, 11 லட்சம் சதுர அடியாக சரிந்துள்ளது.
அதே சமயம், ஐதராபாத்தில், குத்தகைக்கு பெறப்பட்ட அலுவலக இடம், 9 லட்சத்தில் இருந்து, 11 லட்சம் சதுர அடி; கோல்கட்டாவில், 20 ஆயிரத்தில் இருந்து, 40 ஆயிரம் சதுர அடியாக உயர்ந்துள்ளது. புனே நகரிலும், 4 லட்சத்தில் இருந்து, 5 லட்சம் சதுர அடி என்ற வகையில் குத்தகை அலுவலகங்கள் அதிகரித்துள்ளன. அதே சமயம், மதிப்பீட்டு காலாண்டில், ஏழு முக்கிய நகரங்களில், வாடகை அலுவலகங்களுக்கான தேவை, ஏற்ற இறக்கமின்றி சீராக காணப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|