கடந்த ஆண்டை போல் பாதிப்பு இருக்காது: மூடிஸ் கடந்த ஆண்டை போல் பாதிப்பு இருக்காது: மூடிஸ் ...  இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடி இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடி ...
மறைமுக வரி வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2021
19:01

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மறைமுக வரி வருவாய், 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 10.71 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, திருத்தி அமைக்கப்பட்ட மதிப்பீட்டைவிட அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:ஜி.எஸ்.டி., சுங்க வரி, கலால் வரி உள்ளிட்ட மறைமுக வரி வசூல், கடந்த நிதியாண்டில், 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.இதற்கு முந்தைய, 2019 – 20ம் நிதியாண்டில் வசூல், 9.54 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

0கடந்த நிதியாண்டில், நிகர மத்திய ஜி.எஸ்.டி., வசூல், 5.48 லட்சம் கோடி ரூபாயாகும். சுங்க வரி வகையில், 1.32 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. மேலும், மத்திய கலால் மற்றும் சேவை வரி வசூல், 3.19 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஜி.எஸ்.டி., வசூலை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டின் முதல் பாதியில், கடுமையான பாதிப்புக்கு உள்ளானது. இருப்பினும், இரண்டாவது பாதியில் மீட்சி ஏற்பட்டது.இரண்டாவது பாதியில், ஜி.எஸ்.டி., வசூல் அதிகரிக்க துவங்கி, ஆறு மாதங்களும், தலா, 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் தொடர்ந்து வசூல் ஆனது.

நிதியாண்டின் இறுதி மாதமான, கடந்த மார்ச் மாதத்தில், இதுவரை இல்லாத வகையில், 1.24 லட்சம் கோடி ரூபாய் வசூலாகி சாதனை படைத்தது.அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, ஜி.எஸ்.டி., வரி செலுத்துவது எளிதானதாகி உள்ளது.இவ்வாறு நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)