பதிவு செய்த நாள்
13 ஏப்2021
19:04
மும்பை:ஆர்.டி.ஜி.எஸ்., முறையிலான, பணப்பரிமாற்ற சேவையை, 14 மணி நேரத்துக்கு, வங்கி வாடிக்கையாளர்கள் பெற இயலாது என, ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.
இதையடுத்து, வங்கி வாடிக்கையாளர்கள், 17ம் தேதி சனிக்கிழமை நள்ளிரவு முதல், 18ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம், 2 மணி வரை, ஆர்.டி.ஜி.எஸ்., மூலம் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள இயலாது.
உயர் தொகை
ஆர்.டி.ஜி.எஸ்., என்பது, ‘ஆன்லைன்’ மூலமாக, ஒரு கணக்கிலிருந்து இன்னொரு கணக்குக்கு, உயர் தொகையை செலுத்துவதற்கான முறையாகும்.இந்த முறையின் கீழ், குறைந்தபட்சம், 2 லட்சம் ரூபாயிலிருந்து, அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரை பணப் பரிமாற்றத்தை வாடிக்கையாளர்களால் மேற்கொள்ள முடியும்.ஆர்.டி.ஜி.எஸ்., சேவைக்கான தொழில் நுட்பத்தை மேம்படுத்த இருப்பதால், மேற்சொன்ன சமயத்தில் பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள இயலாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.10 லட்சம்
இருப்பினும், இந்த சமயத்தில், என்.இ.எப்.டி., சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை வழக்கம் போல இயங்கும். ஆனால், இந்த சேவை மூலம் குறைந்தபட்சம் எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் செலுத்தலாம். அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் ஆகும்.இந்த மாற்றம் குறித்து, வங்கிகள், அதன் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு, ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுஉள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|