மறைமுக வரி வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு மறைமுக வரி வருவாய் 12 சதவீதம் அதிகரிப்பு ...  இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடி இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடி ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
நெருக்கடிக்கு உள்ளாகி வரும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
18:46

புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த தரகு நிறுவனமான, ‘கோல்டுமேன் சாக்ஸ்’ கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததை அடுத்து, இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை குறைத்து அறிவித்துள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் நம்பிக்கையில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில், 10.9 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது, கொரோனா பரவல் அதிகரித்திருப்பதை அடுத்து, 10.5 சதவீதமாக இருக்கும் என, குறைத்து அறிவித்து உள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து, பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என, முதலீட்டாளர்கள் கவலை கொள்கிறார்கள். இந்த போக்கு, பொருளாதார மீட்சியை தாமதப்படுத்தும்.முதலீட்டாளர்களின் மனப்போக்கு, பங்குச் சந்தைகளையும் பாதிப்பதாக இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை, அதன் குறியீட்டு எண், நிப்டி, அதன் ஓராண்டு அதிகபட்ச நிலையிலிருந்து, 7 சதவீதம் சரிவைக் கண்டிருக்கிறது.

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நம்பிக்கையில் ஒரு நெருக்கடி ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. இதன் தொடர்ச்சியாகவும், தடை உத்தரவுகள் காரணமாகவும் சந்தையில் சில துறை பங்குகள் மீது பாதிப்புகள் ஏற்படக்கூடும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)