பதிவு செய்த நாள்
14 ஏப்2021
18:46
புதுடில்லி:அமெரிக்காவைச் சேர்ந்த தரகு நிறுவனமான, ‘கோல்டுமேன் சாக்ஸ்’ கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்ததை அடுத்து, இந்தியாவின் வளர்ச்சி குறித்த கணிப்பை குறைத்து அறிவித்துள்ளது. மேலும், முதலீட்டாளர்கள் நம்பிக்கையில் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு ஆண்டில், 10.9 சதவீதமாக இருக்கும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது, கொரோனா பரவல் அதிகரித்திருப்பதை அடுத்து, 10.5 சதவீதமாக இருக்கும் என, குறைத்து அறிவித்து உள்ளது.இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து, பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இது பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என, முதலீட்டாளர்கள் கவலை கொள்கிறார்கள். இந்த போக்கு, பொருளாதார மீட்சியை தாமதப்படுத்தும்.முதலீட்டாளர்களின் மனப்போக்கு, பங்குச் சந்தைகளையும் பாதிப்பதாக இருக்கிறது. தேசிய பங்குச் சந்தையை பொறுத்தவரை, அதன் குறியீட்டு எண், நிப்டி, அதன் ஓராண்டு அதிகபட்ச நிலையிலிருந்து, 7 சதவீதம் சரிவைக் கண்டிருக்கிறது.
பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் நம்பிக்கையில் ஒரு நெருக்கடி ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. இதன் தொடர்ச்சியாகவும், தடை உத்தரவுகள் காரணமாகவும் சந்தையில் சில துறை பங்குகள் மீது பாதிப்புகள் ஏற்படக்கூடும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|