இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடி இந்திய தர நிர்ணய கழக சான்றிதழ் கட்டணத்தில் தள்ளுபடி ...  பொதுத் துறை பங்குகள் மத்திய அரசு விற்பனை பொதுத் துறை பங்குகள் மத்திய அரசு விற்பனை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு பணம் அனுப்புவது சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஏப்
2021
18:51

புதுடில்லி:கடந்த இரண்டு வாரங்களாக, நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு பணம் அனுப்புவது, 10 சதவீதம் அளவுக்கு குறைந்து உள்ளது.

மஹாராஷ்டிரா, டில்லி தலைநகர் பிராந்தியம் உள்ளிட்ட பல பகுதிகளில், கொரோனாவை முன்னிட்டு, தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதை அடுத்து, இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்கள் ஊர்களுக்கு செல்ல துவங்கி இருக்கிறார்கள்.இதன் காரணமாக, இவர்கள், தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவது குறைந்து வருகிறது. இதையடுத்து, நகர பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்டு வரும் பணம், 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்திலேயே, வெளிமாநிலங்களிலிருந்து, பெரிய நகரங்களுக்கு வந்து பணிபுரிந்து வரும் ஊழியர்களில் பலர், நகரங்களை விட்டு வெளியேற துவங்கிவிட்டனர். கடந்த ஆண்டு, ஊரடங்குகள் காரணமாக பாதிக்கப்பட்டதன் பின்னணியில், தற்போது பரவல் அதிகரிக்க துவங்கிய நிலையிலேயே, மக்கள் நகரங்களை விட்டு வெளியேற துவங்கி இருக்கிறார்கள்.

இருப்பினும், கட்டுமான நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள், ஊழியர்களை பாதுகாப்பாக தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கி இருப்பதை அடுத்து, கடந்த ஆண்டு நிலை ஏற்படாது என்கிறார்கள், துறை சார்ந்தவர்கள்.மேலும், அரசும் முழு அடைப்பு உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பிக்காமல், தொற்று அதிகரித்திருக்கும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது.இதனால், இம்முறை அதிகமான ஊழியர்கள், சொந்த ஊர் நோக்கி செல்லமாட்டார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)