பதிவு செய்த நாள்
14 ஏப்2021
18:51
புதுடில்லி:கடந்த இரண்டு வாரங்களாக, நகரங்களிலிருந்து கிராமங்களுக்கு பணம் அனுப்புவது, 10 சதவீதம் அளவுக்கு குறைந்து உள்ளது.
மஹாராஷ்டிரா, டில்லி தலைநகர் பிராந்தியம் உள்ளிட்ட பல பகுதிகளில், கொரோனாவை முன்னிட்டு, தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவதை அடுத்து, இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், மீண்டும் தங்கள் ஊர்களுக்கு செல்ல துவங்கி இருக்கிறார்கள்.இதன் காரணமாக, இவர்கள், தங்கள் குடும்பங்களுக்கு பணம் அனுப்புவது குறைந்து வருகிறது. இதையடுத்து, நகர பகுதிகளில் இருந்து அனுப்பப்பட்டு வரும் பணம், 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்திலேயே, வெளிமாநிலங்களிலிருந்து, பெரிய நகரங்களுக்கு வந்து பணிபுரிந்து வரும் ஊழியர்களில் பலர், நகரங்களை விட்டு வெளியேற துவங்கிவிட்டனர். கடந்த ஆண்டு, ஊரடங்குகள் காரணமாக பாதிக்கப்பட்டதன் பின்னணியில், தற்போது பரவல் அதிகரிக்க துவங்கிய நிலையிலேயே, மக்கள் நகரங்களை விட்டு வெளியேற துவங்கி இருக்கிறார்கள்.
இருப்பினும், கட்டுமான நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள், ஊழியர்களை பாதுகாப்பாக தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கி இருப்பதை அடுத்து, கடந்த ஆண்டு நிலை ஏற்படாது என்கிறார்கள், துறை சார்ந்தவர்கள்.மேலும், அரசும் முழு அடைப்பு உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பிக்காமல், தொற்று அதிகரித்திருக்கும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது.இதனால், இம்முறை அதிகமான ஊழியர்கள், சொந்த ஊர் நோக்கி செல்லமாட்டார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|