பதிவு செய்த நாள்
20 ஏப்2021
20:08
புதுடில்லி:‘ஆதித்ய பிர்லா சன் லைப்’ ஏ.எம்.சி., நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்திருக்கிறது.
ஆதித்ய பிர்லா சன் லைப் ஏ.எம்.சி., நிறுவனம், ஆதித்ய பிர்லா குழுமம் மற்றும் கனடாவை சேர்ந்த ‘சன் லைப் பைனான்ஷியல்’ நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும். ஆதித்ய பிர்லா ‘கேப்பிட்டல்’ நிறுவனத்தின் துணை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது இந்நிறுவனம்.
இந்த பங்கு வெளியீட்டின்போது ஆதித்ய பிர்லா கேப்பிட்டல் நிறுவனத்தின் வசம் இருக்கும், ஆதித்ய பிர்லா சன் லைப் ஏ.எம்.சி., பங்குகளில், 5 ரூபாய் முகமதிப்பு கொண்ட, 28.50 லட்சம் பங்குகளை விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இதேபோல், இந்நிறுவன பங்குகளை வைத்திருக்கும் இன்னொரு கூட்டு நிறுவனமான, சன்லைப் இந்தியா ஏ.எம்.சி., °இன்வெஸ்ட்மென்ட்ஸ்’ நிறுவனம், 3.60 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டின் அறிக்கையின் படி, ஆதித்ய பிர்லா சன் லைப் ஏ.எம்.சி., நிறுவனம், 2.38 லட்சம் கோடி ரூபாய் சொத்தை நிர்வகித்து வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|