பதிவு செய்த நாள்
21 ஏப்2021
22:55
புதுடில்லி:மூத்த தொழிலதிபரான ரத்தன் டாடா, ‘மெயிலிட்’ எனும், நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனம் அஞ்சல் மேலாண்மை மற்றும் போக்குவரத்து சம்பந்தமாக, நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் நிறுவனமாகும்.
ரத்தன் டாடா, இந்நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாக தெரிவித்திருந்த போதிலும், எவ்வளவு தொகையை முதலீடு செய்துள்ளார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.அஞ்சல் மற்றும் பார்சல்களை நிர்வகிக்கும் வகையிலான, ‘மெயில்ரூம்’களை நாடு முழுக்க அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிறுவனம்.முதற்கட்டமாக, 500 மெயில்ரூம்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.மெயிலிட் நிறுவனம், டாடா குழுமத்தை சேர்ந்த பல நிறுவனங்கள் மற்றும் சில கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு கூரியர், சரக்கு, மூன்றாம் நபர் சரக்குபோக்குவரத்து, அஞ்சல் சேவைகள் ஆகியவற்றை ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பம் வாயிலாக மேலாண்மை செய்து வருகிறது.
இந்நிலையில், ரத்தன் டாடா தங்களுடைய நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பது நல்ல எதிர்காலத்துக்கு உதவிகரமாக இருக்கும் என, ‘மெயிலிட்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|