பதிவு செய்த நாள்
23 ஏப்2021
20:42
புதுடில்லி:ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது, கோரோனா பாதிப்புகள் என பல தடைகள் இருந்த போதிலும், இந்தியர்களுக்கு விருப்பமான முதலீட்டு இடமாக, தொடர்ந்து பிரிட்டன் இருந்து வருகிறது.
கடந்த, 2020ம் ஆண்டில், பிரிட்டனில், 842 இந்திய நிறுவனங்கள் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது, 850 நிறுவனங்களாக அதிகரித்துள்ளன. மேலும், இந்த நிறுவனங்களின் மொத்த விற்றுமுதலும், 4.28 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 5.28 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. அதிலும், 5 நிறுவனங்களின் விற்றுமுதல், 100 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் செயல்படும் இந்திய நிறுவனங்களில், 47 சதவீத நிறுவனங்களின் நிர்வாகக் குழுவில், ஒரு பெண்ணாவது இருப்பதாகவும், கிராண்டு தார்ன்டன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரிட்டன் பொருளாதாரத்தில், இந்திய நிறுவனங்களின் பங்களிப்பு, ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாகவும், பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையே யான வர்த்தக தொடர்புகள் வலுவானதாக இருப்பதாகவும், அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|