பதிவு செய்த நாள்
25 ஏப்2021
19:04
கடந்த ஆண்டு வெளியான பொது பங்கு வெளியீடுகளில் பெரும்பாலானவை, அவை பட்டியலிடப்பட்ட நாளில் அதிக லாபம் அளித்திருப்பது தெரிய வந்துள்ள
வர்த்தக நிறுவனங்கள், சந்தையில் நிதி திரட்டுவதற்காக பங்குகளை வெளியிடுவது, பொது பங்கு வெளியீடு என குறிப்பிடப்படுகின்றன.கடந்த நிதியாண்டில் இவ்வாறு, 31 நிறுவனங்கள் சந்தையில் நுழைந்தன. இவற்றில், 22 நிறுவன பங்குகள் பட்டியலிடப்பட்ட தினத்தில், அவற்றின் விலையை விட அதிக விலையில் முடிவடைந்தன.இப்படி பட்டியலிடப்பட்ட நாளில் பங்கு வெளியீடுகள் அளித்த சராசரி பலன், 34 சதவீதமாக இருப்பதாகவும், இது கடந்த ஐந்தாண்டுகளில் மிகவும் அதிகமானது என்றும் தெரிய வந்துள்ளது. நான்கு நிறுவனங்களின் பங்குகள், முதல் நாள் அன்று இரண்டு மடங்காக உயர்ந்தன.பங்குச் சந்தையில் காணப்படும் போக்கு, இதற்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளதாக பங்குச் சந்தை வல்லுனர்கள் கருதுகின்றனர். கடந்த நிதியாண்டில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி, 70 சதவீதம் ஏற்றம் கண்டன.பொது பங்கு வெளியீடுகளில் ஒன்பது வெளியீடுகள், முதல் நாள் அன்று இறக்கத்துடன் முடிவுக்கு வந்தன. இவற்றில் ஏழு நிறுவன பங்குகள், ஒற்றை இலக்க இறக்கத்தையே சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|