உள்நாட்டு விமான சேவை பயணியர் வருகை சரிவு உள்நாட்டு விமான சேவை பயணியர் வருகை சரிவு ...  ‘கெய்ர்ன்’ நிறுவன விவகாரம் வங்கிகளுக்கு அரசின் அறிவுறுத்தல் ‘கெய்ர்ன்’ நிறுவன விவகாரம் வங்கிகளுக்கு அரசின் அறிவுறுத்தல் ...
பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ‘நுவோகோ விஸ்டாஸ்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மே
2021
18:45

புதுடில்லி:பிரபல, ‘நிர்மா’ குழுமத்தைச் சேர்ந்த, ‘நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது.

‘நுவோகோ விஸ்டாஸ் கார்ப்பரேஷன்’ புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, 5 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது.இதில், 1,500 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், 3,500 கோடி ரூபாய்க்கு பங்குதாரர்கள் பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் தொகையை கொண்டு, கடன்களை அடைக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்நிறுவனம், சிமென்ட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. இதன் ஆலைகளின் வாயிலாக, ஆண்டு ஒன்றுக்கு கிட்டத்தட்ட, 2.23 கோடி டன் சிமென்ட் தயாரிக்கப்படுகிறது. இந் நிறுவனத்துக்கு மொத்தம், 11 தொழிற்சாலைகள் உள்ளன. சத்தீஷ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் ஆலைகள் உள்ளன. இந்நிறுவனம் இதற்கு முன், ‘லாபார்ஜ் இந்தியா’ என அழைக்கப்பட்டு வந்தது.கடந்த ஆண்டு பிப்ரவரியில், ‘இமாமி’ நிறுவனத்திடமிருந்து ஆண்டுக்கு, 83 லட்சம் டன் சிமென்ட் வணிகத்தை, 5,500 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த இருப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கையகப்படுத்தல் முயற்சிக்கு, இந்திய சந்தைகள் போட்டி ஆணையமும், கடந்த மே மாதத்தில் அனுமதி வழங்கி உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)