பதிவு செய்த நாள்
11 மே2021
19:50
புதுடில்லி:பெருந்தொற்றையும் மீறி, கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் தனியார் ஈக்விட்டி முதலீடுகள், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கான ஒப்பந்தங்களின் எண்ணிக்கை, 161 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத உயர்வாகும்.
இது குறித்து ஆலோசனை நிறுவனமான கிராண்ட் தார்ன்டன் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு, 94 ஆயிரத்து, 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். உள்நாட்டில் மட்டும் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் சம்பந்தமாக நடைபெற்ற பரிவர்த்தனைகள் 30க்கும் அதிகமாகும். இதன் மதிப்பு, 36 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாகும்.
கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாத ஒப்பந்த பரிவர்த்தனைகள் 18 சதவீதம் அதிகம். ஒப்பந்தங்களின் மதிப்பும், 174 சதவீதம் அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|