பதிவு செய்த நாள்
12 மே2021
21:04
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இதுவரை, 17 ஆயிரத்து, 61 கோடி ரூபாய் அளவுக்கு, ‘ரீபண்டு’ வழங்கி இருப்பதாக, வருமான வரி துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், வருமான வரி செலுத்தியவர்களில், 13 லட்சம் பேர்களுக்கு, 17 ஆயிரத்து, 61 கோடி ரூபாய் ரீபண்டாக வழங்கப்பட்டுள்ளது.இதில், தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களில், 12.71 லட்சம் பேர்களுக்கு, 5,575 கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கார்ப்பரேட் வரிக்கான ரீபண்டாக, 29 ஆயிரத்து, 592 பேர்களுக்கு, 11 ஆயிரத்து 486 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் தேதியிலிருந்து, மே 10 தேதி வரையிலான காலத்தில், இந்த ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ,இந்த ரீபண்டு எந்த நிதியாண்டு கணக்கு தாக்கலுக்காக வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிவிக்கவில்லை.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|