பதிவு செய்த நாள்
12 மே2021
21:06
புதுடில்லி, மே 13–‘மெடி அசிஸ்ட் ஹெல்த்கேர் சர்வீசஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாடு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்திருக்கிறது.இந்த பங்கு வெளியீட்டின்போது, முழுக்க முழுக்க தற்போதைய பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது.
பங்குதாரர்களின், 2.8 கோடி பங்குகள் விற்பனைக்கு விடப்பட உள்ளது. புதிய பங்குகள் எதுவும் வெளியிடப்பட போவதில்லை என அறிக்கையில் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெங்களூருரைச் சேர்ந்த மெடி அசிஸ்ட், ஆரோக்கியம் மற்றும் காப்பீடு சம்பந்தமான தொழில்நுட்ப நிறுவனமாகும்.இது பல்வேறு பிரிவினர்களுக்கான சுகாதார நலன்களை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக பொது சுகாதார திட்டங்களில் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனம் கடந்த, 2019 – -2020ம் நிதியாண்டில், 7,830 கோடி ரூபாய் மதிப்பிலான, ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்களை நிர்வகித்து உள்ளது.மேலும் கடந்த, 2020ம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த, 9 மாதங்களில், 257 கோடி ரூபாய் மொத்த வருவாயையும், வரிக்கு பிந்தைய லாபமாக, 33.09 கோடி ரூபாயையும் ஈட்டிஉள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|