ஒரு மாதத்துக்கு பதிலாக 8 நாட்கள்: தொலைபேசி கட்டண அதிருப்தி ஒரு மாதத்துக்கு பதிலாக 8 நாட்கள்: தொலைபேசி கட்டண அதிருப்தி ...  எரிசாம்பல் பயன்பாட்டுக்கு  புதிய வரைவு விதிகள் எரிசாம்பல் பயன்பாட்டுக்கு புதிய வரைவு விதிகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
புதிய பங்கு வெளியீட்டில் ‘கோ ஏர்லைன்ஸ்’ நிறுவனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2021
20:34

புதுடில்லி:பட்ஜெட் விமான போக்குவரத்து நிறுவனமான, ‘கோ ஏர்லைன்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது.

கோ ஏர்லைன்ஸ் நிறுவனம், அண்மையில் நிறுவனத்தின் பெயரை, ‘கோ பர்ஸ்ட்’ என மாற்றம் செய்திருந்தது. இந்நிலையில், 3,600 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது.‘வாடியா’ குழுமத்துக்கு சொந்தமான இந்த விமான போக்குவரத்து நிறுவனம், 15 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனம், 3,600 கோடி ரூபாய் திரட்டும் பொருட்டு, பங்குதாரர்களின் பங்குகளை விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.திரட்டப்படும் நிதியைக் கொண்டு கடனை அடைக்கவும், விமானங்களை பராமரிக்கவும், ரொக்க இருப்பு வைத்துக் கொள்ளவும் திட்டமிட்டு உள்ளது.

மேலும், எரிபொருள் வாங்கிய வகையில், ‘இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன்’ நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய கடனை முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியையோ கொடுக்கவும் திட்டமிட்டு உள்ளது.

இந்நிறுவனம் தற்போது மிகவும் குறைந்த கட்டணத்திலான சேவையை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. தற்சமயம், ‘இண்டிகோ,ஸ்பைஸ்ஜெட்’ ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கவுசிக் கோனா கூறும்போது, ‘‘கடந்த 15 மாதங்களாக மிகவும் கடினமான காலத்தில் உள்ளது நிறுவனம்.

அசாதாரண சூழல்கள் தொடர்ந்தாலும், கோ பர்ஸ்ட் நிறுவனம், அதில் வாய்ப்புகளை பார்க்கிறது.‘‘நிறுவனத்துக்கு மறுபெயரிட்டது, நாளைய தினம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது,’’ என, தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)