பதிவு செய்த நாள்
20 மே2021
19:53
பிரதமரின் கிசான் யோஜனா, தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6000 ரூபாய் நிதியை தலா ரூ.2,000 வீதம் மூன்று சமமான 4 மாதத் தவணைகளில் வழங்குகிறது. மே 14 ஆம் தேதி அன்று 2021 - 22 நிதியாண்டுக்கான முதல் தவணை பணம் வழங்கப்பட்டது. இந்த தொகையினை எடுப்பதற்கு விவசயிகள் ஃபினோ வங்கி செயல்பாட்டு மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வங்கியின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
எந்தவொரு வங்கியிலும் கணக்கு வைத்திருக்கும் டி.பி.டி திட்டத்தின் பயனாளிகள், பணம் எடுக்க அல்லது வேறு ஏதேனும் வங்கிப் பரிவர்த்தனை செய்ய அருகிலுள்ள பினோ மையத்துக்குச் செல்லலாம். அருகிலுள்ள பினோ மையத்தைக் கண்டறிய, மக்கள் https://fino.latlong.in/URL ஐக் கிளிக் செய்யலாம் அல்லது கியூ.ஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யலாம், என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபற்றி பினோ வங்கியின் சி.எஸ்.ஓ ஷைலேஷ் பாண்டேக கூறுகையில், எப்போதும் கிடைக்கப்பெறும் வங்கிச் சேவைகள் காலத்தின் தேவை. மக்கள் நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் இந்த கடினமான காலங்களில் மக்களுக்கு வசதியை வழங்குவதற்கு பினோவின் சேவை கிடைக்கக்கூடிய விற்பனை மையங்கள் நீட்டிக்கப்பட்ட மணிநேரங்களுக்கு திறந்திருக்கும். பயனாளிகள் எந்த நேரத்திலும் மையங்களுக்குச் செல்லலாம் அல்லது பணம் எடுக்க அல்லது தங்கள் குடும்பத்திற்குப் பணம் அனுப்ப, வீட்டு வாசலிலேயே சேவைகளைப் பெறலாம். மிக முக்கியமாக, பி.பி.சி.எல் விற்பனை நிலையங்கள் உட்பட எங்கள் மையங்களில் பணம் எப்போதும் கிடைக்கும். தேவைப்படும் இந்த நேரத்தில் விவசாய சமூகத்திற்கு வசதியான வங்கிக்கான அணுகலை வழங்குவதே எங்கள் நோக்கம், என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|