பதிவு செய்த நாள்
20 மே2021
21:51
புதுடில்லி:இந்திய விருந்தோம்பல் துறை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் கடும் சரிவைக் கண்டிருப்பதாக, உலகளவிலானா ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ஜே.எல்.எல்., தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், விருந்தோம்பல் துறையில் ஒரு அறைக்கான வருவாய் 39 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.முக்கியமான ஆறு நகரங்களில் ஒரு அறைகான வருவாய் என்பது 48 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.இருக்கும் நகரங்களில், கோவா ஓரளவு பரவாயில்லை. அங்கு அறைகள் நிரம்புவது 6.4 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது இதற்கு காரணமாகும்.
பெங்களுரிவில் மிகவும் சரிவு காணப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 60.6 சதவீதம் அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.முதல் அலைக்கு பிறகு, கார்ப்பரேட் பயணங்கள் காரணமாக ஓரளவு நிலைமை சீராக துவங்கியது. ஆனால், அது நீடிக்க முடியாமல் இரண்டாவது அலை வந்துவிட்டது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|