பதிவு செய்த நாள்
25 மே2021
19:42
புதுடில்லி:தங்க நகைகளுக்கு, ‘ஹால்மார்க்’ முத்திரை, ஜூன் 1ம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசத்தை, 15ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, இந்த கால அவகாச நீட்டிப்பை, மத்திய அரசு வழங்கி இருக்கிறது.நுகர்வோர் விவகார துறை அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தங்க நகைகளுக்கு, இந்திய தர நிர்ணய அமைப்பான, பி.ஐ.எஸ்., வழங்கும் சான்றான, ‘ஹால்மார்க்’ முத்திரையை கட்டாயம் பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.அத்துடன், அதை நடைமுறைப்படுத்துவதற்கான அவகாசமும் கொடுத்து, 2021 ஜனவரி 15ம் தேதி முதல், ‘ஹால்மார்க்’ முத்திரை இல்லாமல், நகை வியாபாரம் செய்யக்கூடாது என்றும் அறிவித்தது.
இருப்பினும், நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவும், நான்கு மாத கூடுதல் அவகாசம் கொடுத்து, ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.தற்போது சம்பந்தப்பட்ட துறையினரின் கோரிக்கையை அடுத்து, ஜூன் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து ஜூன், 15ம் தேதி முதல், விற்பனையாளர்கள், 14, 18 மற்றும் 22 கேரட் நகைகளை மட்டுமே விற்பனை செய்ய இயலும்.இதற்கிடையே, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் சங்கம் அரசு அறிவிப்பில் ஏற்றுமதி சம்பந்தமாக சில விளக்கங்களை கோரி இருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|