விரைவில் ஓ.டி.பி., வாயிலாக போன் திட்டங்களை மாற்றலாம் விரைவில் ஓ.டி.பி., வாயிலாக போன் திட்டங்களை மாற்றலாம் ...  ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில் 23 ஆயிரம் பேருக்கு வேலை ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில் 23 ஆயிரம் பேருக்கு வேலை ...
நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ முத்திரை அவகாசம் மேலும் நீட்டிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2021
19:42

புதுடில்லி:தங்க நகைகளுக்கு, ‘ஹால்மார்க்’ முத்திரை, ஜூன் 1ம் தேதி முதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசத்தை, 15ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, இந்த கால அவகாச நீட்டிப்பை, மத்திய அரசு வழங்கி இருக்கிறது.நுகர்வோர் விவகார துறை அமைச்சர் பியுஷ் கோயல் தலைமையிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில், தங்க நகைகளுக்கு, இந்திய தர நிர்ணய அமைப்பான, பி.ஐ.எஸ்., வழங்கும் சான்றான, ‘ஹால்மார்க்’ முத்திரையை கட்டாயம் பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.அத்துடன், அதை நடைமுறைப்படுத்துவதற்கான அவகாசமும் கொடுத்து, 2021 ஜனவரி 15ம் தேதி முதல், ‘ஹால்மார்க்’ முத்திரை இல்லாமல், நகை வியாபாரம் செய்யக்கூடாது என்றும் அறிவித்தது.

இருப்பினும், நாட்டில் கொரோனா தொற்று ஏற்படவும், நான்கு மாத கூடுதல் அவகாசம் கொடுத்து, ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.தற்போது சம்பந்தப்பட்ட துறையினரின் கோரிக்கையை அடுத்து, ஜூன் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஜூன், 15ம் தேதி முதல், விற்பனையாளர்கள், 14, 18 மற்றும் 22 கேரட் நகைகளை மட்டுமே விற்பனை செய்ய இயலும்.இதற்கிடையே, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் சங்கம் அரசு அறிவிப்பில் ஏற்றுமதி சம்பந்தமாக சில விளக்கங்களை கோரி இருக்கிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)