பதிவு செய்த நாள்
03 ஜூன்2021
20:27
புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்திலிருந்து, ஊதியமாக எந்த தொகையையும் பெற்றுக் கொள்ளவில்லை.
வணிகங்களையும், பொருளாதாரத்தையும் கொரோனா மிகுந்த பாதிப்புக்குள்ளாக்கியதை அடுத்து, அவரே முன்வந்து, தனக்கு ஊதியம் எதுவும் வேண்டாம் என அறிவித்துவிட்டார். கடந்த நிதியாண்டுக்கான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், முகேஷ் அம்பானிக்கான ஊதியம் எனும் பகுதியில், ‘பூஜ்ஜியம்’ எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதற்கு முந்தைய நிதியாண்டில், முகேஷ் அம்பானி ஊதிய மாக, 15 கோடி ரூபாயை பெற்றுள்ளார்.அதுமட்டுமல்ல, தொடர்ந்து 11 ஆண்டுகளாகவே அவர் இதே தொகையை தான் ஊதியமாக பெற்று வந்துள்ளார்.ஊதியத்தை அதிகரித்து கொள்ளவில்லை.கடந்த நிதியாண்டில், அம்பானியின் மனைவியான நிடா அம்பானி, நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டணமாக, 8 லட்சம் ரூபாயும்; ஆண்டு கமிஷன் தொகையாக, 1.65 கோடி ரூபாயும் பெற்றுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|