பதிவு செய்த நாள்
11 ஜூன்2021
22:09
புதுடில்லி:இணைப்புக்கு முந்தைய சிண்டிகேட் வங்கியின் கிளைகளுக்கான, ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றப்பட்டுள்ளதால், அதன் வாடிக்கையாளர்கள், வரும் ஜூலை 1ம் தேதியிலிருந்து, புதிய ஐ.எப்.எஸ்.சி., குறியீட்டை பயன்படுத்த வேண்டும் என, கனரா வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டது. இந்நிலையில், சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது, கனரா வங்கி.அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:புதிய ஐ.எப்.எஸ்.சி., குறியீட்டை அறிந்துகொள்ள, கனரா வங்கி இணையத ளத்தையோ; வங்கி கிளையையோ அணுகவும்.
சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள், புதிய ஐ.எப்.எஸ்.சி.,மற்றும் எம்.ஐ.சி.ஆர்., குறியீடுகளுடன் கூடிய, புதிய காசோலை புத்தகத்தை பெற்றுக் கொள்ளலாம்.வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைக்கான, ‘சுவிப்ட்’ குறியீடும் மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|