பதிவு செய்த நாள்
21 ஜூன்2021
02:07
கொரோனா இரண்டாம் அலை பாதிப்புக்கு மத்தியில், இளம் வயதினரிடையே ஆயுள் காப்பீடு தேவை தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலையில் பாதிப்பும், உயிர் இழப்பும் அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது. இதன் விளைவாக ஆயுள் காப்பீடு பெறுவதன் அவசியத்தை பலரும் உணரத் துவங்கியுள்ளனர்.
ஏப்ரல், மே மாதங்களில், 25 முதல் 35 வயது பிரிவினர் மத்தியில் ஆயுள் காப்பீடு பெறுவது 30 சதவீதம் அதிகரித்திருப்பதாக, காப்பீடு சேவை இணைய நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ‘ஆன்லைன்’ மூலம் ‘டெர்ம் இன்சூரன்ஸ்’ பெறுபவர்கள் எண்ணிக்கையும் 70 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.கொரோனா பெருந்தொற்று, நிதி பாதுகாப்பு பெற்றிருப்பதன் அவசியத்தையும், தற்போதுள்ள காப்பீடு பாதுகாப்பின் போதாமையையும் பலருக்கு உணர்த்திஇருப்பதாக காப்பீடு நிறுவனங்கள் கருதுகின்றன.
காப்பீடு பாலிசிகள் தொடர்பான தகவல்கள் அறியும் விசாரணையும் கணிசமாக அதிகரித்திருப்பதாக இணையம் மூலம் காப்பீடு சேவை வழங்கும் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே, பங்குச் சந்தையில் இருப்பவர்களும் காப்பீடு நிறுவன பங்குகளை வாங்குவது சாதகமாக அமையுமா என்பதை பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|