பதிவு செய்த நாள்
25 ஜூன்2021
19:40
புதுடில்லி:‘ஹீரோ எலக்ட்ரிக்’ நிறுவனம், அதன் வாகனங்களின் விலையை 33 சதவீதம் வரை குறைத்து அறிவித்துஉள்ளது.
மத்திய அரசு, மின்சார வாகன தயாரிப்பு மற்றும் துரிதமாக அவற்றை ஏற்றுக் கொள்வதற்கான திட்டமான, ‘பேம் இந்தியா’ திட்டத்தின் இரண்டாம் நிலையில், பல சலுகைகளை அறிவித்து உள்ளது.இதனையடுத்து, இந்த சலுகைகளின் பலன்கள் வாடிக்கையாளர்களையும் சென்று சேரும் வகையில், பல மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்கள், விலையை குறைத்து அறிவித்து வருகின்றன.
இந்த வரிசையில், ‘ஹீரோ எலக்ட்ரிக்’ நிறுவனமும் விலை குறைப்பை அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 12 சதவீதத்திலிருந்து 33 சதவீதம் வரை விலையை குறைத்துள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.மேலும், அரசின் இந்த நட்பான அணுகுமுறையினால், அடுத்த 5 ஆண்டுகளில், மேலும் 50 – 70 லட்சம் வாகனங்கள் சாலைகளில் அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|