பதிவு செய்த நாள்
26 ஜூன்2021
19:01
புதுடில்லி:மெய்நிகர் நாணயங்களில் ஒன்றான, ‘பிட்காய்ன்’ மதிப்பு அண்மைக் காலமாக சரிவை கண்டு வருகிறது. தற்போது ஒரு, ‘பிட்காய்ன்’ மதிப்பு, கிட்டத்தட்ட, 30 ஆயிரம் டாலரை நோக்கி சரிந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, இந்திய மதிப்பில், ஒரு ‘பிட்காய்ன்’ விலை, கிட்டத்தட்ட, 22.96 லட்சம் ரூபாயாக இருக்கிறது.கடந்த ஏப்ரலில் ஒரு பிட்காய்ன் மதிப்பு, 65 ஆயிரம் டாலர் என்ற உச்சத்திலிருந்தது, தற்போது அதில் பாதியாக குறைந்துவிட்டது.இந்நிலையில், சந்தை நிபுணர்கள், ‘பிட்காய்ன்’ உள்ளிட்ட நாணயங்கள் மீண்டும் விலை உயர்வது என்பது, இப்போதைக்கு உடனடியாக இருக்காது.
நீண்ட நாட்கள் பிடிக்க கூடும் என்கிறார்கள். சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளில், மெய்நிகர் நாணய வர்த்தகத்துக்கு சிக்கல்கள் நீடிப்பதால், இந்த சரிவு ஏற்பட்டு வருகிறது. கொரோனா தாக்கங்கள் வேறு, இது போன்ற யூக வணிகங்களில் பாதிப்பை ஏற்படுத்திஉள்ளன.
மெய்நிகர் நாணயங்கள் இப்போதைக்கு வலுவான சூழலில் இல்லை என்றும்; இப்போதைக்கு பாதிப்புகளை சரி செய்யும் முயற்சிகளை மட்டுமே இவற்றுக்கான நிறுவனங்கள் மேற்கொள்ள முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.அவர்கள் கூற்றுப்படி, இப்போதைக்கு இத்தகைய முதலீடுகளிலிருந்து சற்று விலகி இருப்பதே சரியான முடிவாக இருக்கும்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|