பதிவு செய்த நாள்
13 ஜூலை2021
19:55
புதுடில்லி:‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல்’ நிறுவனத்துக்கு, பியூச்சர் குழுமத்தின் சொத்துக்களை விற்பது குறித்து விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய மனு மீதான விசாரணையை, சிங்கப்பூர் தீர்ப்பாயம் துவக்கி உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்டில், ‘ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ்’ நிறுவனம், பியூச்சர் குழுமத்தின் சில்லரை மற்றும் மொத்த விற்பனை வணிகம் மற்றும் கிடங்கு வணிகத்தை 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளதாக அறிவித்தது.இந்நிலையில், இந்த ஒப்பந்தம் செல்லாது எனக் கோரி, அமேசான் நிறுவனம், சிங்கப்பூர் பன்னாட்டு தீர்ப்பாயத்தில் முறையிட்டு தடை உத்தரவை பெற்றது.
இதையடுத்து, தடையை நீக்குமாறு பியூச்சர் குழுமம் தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இதன் மீதான விசாரணை தற்போது துவங்கி உள்ளது. கையகப்படுத்துதலை முடித்து அடுத்த கட்டத்துக்கு செல்ல ரிலையன்ஸ் காத்திருக்க, அமேசானின் தடைகளை தாண்ட முடியாமல் தவித்து வருகிறது, பியூச்சர் குழுமம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|