பதிவு செய்த நாள்
21 ஜூலை2021
20:01
புதுடில்லி, ஜூலை 22–நடப்பு ஆண்டில், ரியல் எஸ்டேட் துறையில் நிறுவன முதலீடு, 4 சதவீதம் உயர்ந்து, 37 ஆயிரத்து, 500 கோடி ரூபாயாக உயரும் என, சொத்து ஆலோசனை நிறுவனமான, ‘கோலியர்ஸ்’ தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகளுக்கு இடையே, முதலீட்டாளர்கள், கவர்ச்சிகரமான மதிப்பீடு கொண்டவற்றில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில், இத்துறையில், நிறுவன முதலீடு 36 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.நடப்பு ஆண்டில், இத்துறையில் முதல் ஆறு மாதங்களில் முதலீடு, 21 ஆயிரத்து, 750 கோடி ரூபாயாக உள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, இரு மடங்கு அதிகமாகும்.நடப்பு ஆண்டில் இதுவரை செய்யப்பட்ட மொத்த முதலீட்டில், 35 சதவீதம், அலுவலக கட்டடங்கள் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொழிற்சாலை மற்றும் கிடங்குகள் பிரிவில் 5,813 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது.அதேசமயம், வீடுகள் பிரிவில், 4 சதவீதம் அளவுக்கே முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|