பதிவு செய்த நாள்
25 ஜூலை2021
19:09
இரண்டாம் பொது முடக்கத்தின் போது, முந்தைய பொது முடக்கத்தை விட நுகர்வோர் தேவை 200 மடங்கு அதிகரித்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஆன்லைனில் பொருட்களை வாங்கி பின்னர் பணம் செலுத்த வழி செய்யும், பி.என்.பி.எல்., வசதியை அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ‘ஜெஸ்ட்மணி’ இந்த ஆண்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட மார்ச் முதல் மே மாதம் வரை, தங்கள் நிதி நிலையில் கடன் அளவு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த காலத்தின் ‘இ – -காமர்ஸ்’ பரிவர்த்தனைகள் 200 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும், ‘ஆன்லைன்’ மின்னணு பொருட்கள், ஸ்மார்ட் போன்கள், கல்வி நுட்பம் ஆகிய பிரிவுகளில் அதிக தேவை இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.பெரு நகரங்களில் பெங்களூரு, டில்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் அதிக பரிவர்த்தனைகள் நிகழ்ந்துள்ளன என்றும், ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இரண்டாம் அடுக்கு நகரங்களிலும் பரிவர்த்தனை அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
பொருளாதார சவால்களை மீறி, பல நுகர்வோர் பணத்தை திரும்பிச் செலுத்துவது போன்றவற்றில் எந்த சிக்கலும் இல்லாமல் இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெரும்பாலானோர் தங்கள் நிதி நிலையை திறம்பட திட்டமிட்டு இருந்தது இதற்கான காரணமாக கருதப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|