கொரோனா காப்பீடு செய்தோருக்கு  ரூ.8,000 கோடி தந்த நிறுவனங்கள் கொரோனா காப்பீடு செய்தோருக்கு ரூ.8,000 கோடி தந்த நிறுவனங்கள் ...  20,000 பேருக்கு வேலை: ‘பேடிஎம்’ நிறுவனம் திட்டம் 20,000 பேருக்கு வேலை: ‘பேடிஎம்’ நிறுவனம் திட்டம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
இந்திய பங்கு சந்தை சரிய சீனா, அமெரிக்கா காரணமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2021
21:19

மும்பை:கடந்த மூன்று நாட்களாக, இந்தியா உள்ளிட்ட சர்வதேச பங்குச் சந்தைகள் தொடர் சரிவைக் கண்டு வருகின்றன. நேற்று, மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’ குறியீடு, வர்த்தகத்தின் இடையே, 750க்கும் மேற்பட்ட புள்ளிகள் சரிந்தது.

தேசிய பங்குச் சந்தையின் ‘நிப்டி’ குறியீட்டு, வர்த்தகத்தின் நடுவில், 250 புள்ளிகளுக்கும் மேலாக சரிவடைந்தது. உலகளவில் பங்குச் சந்தைகள் சரிய, சீனா, அமெரிக்கா ஆகியவை காரணம் எனலாம். இது போதாதென்று, பன்னாட்டு நிதியம், இந்திய பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை குறைத்திருப்பது, நம் பங்குச் சந்தைகள் சரிய வழி வகுத்துள்ளது. சீன அரசு, ‘ஆன்லைன்’ கல்வி வியாபாரமாகி வருவதை தடுக்க, தனியார் கல்வி நிலையங்களை, லாபநோக்கமற்ற நிறுவனங்கள் பிரிவிற்கு மாற உத்தரவிட்டுள்ளது.

இதனால், கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள துணிகர முதலீட்டாளர்கள், முதலீடுகளை திரும்ப எடுக்க துவங்கியுள்ளனர். இணைய தொழில்நுட்ப நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சீனா, ஹாங்காங் பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டு வருகின்றன. அமெரிக்காவில் ஆப்பிள், கூகுள், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு நிதிநிலை அறிக்கை நன்கு இருந்த போதிலும், பங்குச் சந்தைகள் இறக்கத்தை சந்தித்துள்ளன.

இதற்கு, அமெரிக்காவில் அதிகரித்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி கடன் பத்திர வெளியீடுகளை குறைக்கும் என எதிர்பார்ப்பு தான் காரணம். மேலும், ‘டெல்டா’ வைரஸ் வேகமாக பரவி வருவதால், தடுப்பூசி செலுத்தியவர்களும், முக கவசம் அணிந்து பணியாற்றுமாறு, அமெரிக்க நோய் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

இதனால், அதிகமானோர் பங்குகளை விற்று வருவதால், அமெரிக்க பங்குச் சந்தைகளும் சரிவில் உள்ளன.இந்த காரணங்களுடன், நடப்பு, 2021 – 22ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மதிப்பீட்டை, 12.5 சதவீதத்தில் இருந்து, 9.5 சதவீதமாக பன்னாட்டு நிதியம் குறைத்துள்ளதால், நம் பங்குச் சந்தைகளும் தொடர் சரிவில் உள்ளன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)