பதிவு செய்த நாள்
03 ஆக2021
20:31
புதுடில்லி:நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி, ஜூன் மாதத்தில், அதற்கு முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 24.1 சதவீதம் அதிகரித்துஉள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் சேவைகள் துறையின் ஏற்றுமதி 24.1 சதவீதம் அதிகரித்து, 1.48 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இதுவே, கடந்த மே மாதத்தில் 1.28 லட்சம் கோடி ரூபாயாகவும், ஏப்ரலில் 1.30 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.ஜூன் மாதத்தில் சேவைகள் துறையின் இறக்குமதி 82 ஆயிரத்து 436 கோடி ரூபாயாக உள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துஉள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில், நாட்டின் மொத்த சேவைகள் துறை ஏற்றுமதி 12 மடங்கு அதிகரித்துள்ளதாக, அண்மையில் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|