பதிவு செய்த நாள்
03 ஆக2021
20:35
புதுடில்லி:‘அதானி வில்மார்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
‘அதானி’ குழுமத்துக்கு சொந்தமான, சமையல் எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அதானி வில்மார் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 4,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
அதானி வில்மார் நிறுவனம், அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த வில்மார் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு தொழிலாகும். கடந்த 1999ம் ஆண்டில் இது துவக்கப்பட்டது. இந்நிறுவனம், ‘பார்ச்சூன்’ எனும் ‘பிராண்ட்’ பெயரில் சமையல் எண்ணெய், அரிசி, சர்க்கரை மற்றும் பல உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
திரட்டப்படும் நிதியை கொண்டு ஆலை விரிவாக்கம், புதிய ஆலை அமைத்தல், கடன்களை அடைத்தல், கையகப்படுத்துதல், முதலீடு மற்றும் பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.இதுவரை, அதானி குழுமத்தை சேர்ந்த ஆறு நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|