பதிவு செய்த நாள்
03 ஆக2021
20:39
புதுடில்லி:நாட்டின் எரிபொருள் தேவை ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது. கொரோனா சம்பந்தமான தடை உத்தரவுகளில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து, பொருளாதார செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தின் பெட்ரோல் விற்பனை, அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 17 சதவீதம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல; கொரோனா தாக்கத்துக்கு முந்தைய 2019 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 3.56 சதவீதம் அதிகரித்துள்ளது.நாட்டில் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்படும் எரிபொருளான டீசல் விற்பனை, கடந்த ஆண்டை விட 12.36 சதவீதம் அதிகரித்துள்ளது.
இருப்பினும், 2019 ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது 10.9 சதவீதம் குறைவாகும். கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படாத ஒரே எரிபொருள் என்றால் அது சமையல் எரிவாயு தான். இது கடந்த ஆண்டை விட 4.05 சதவீதம் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது. மேலும், 2019 ஜூலையை விட 7.55 சதவீதம் அதிகமாகும்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|