பதிவு செய்த நாள்
01 செப்2021
20:19
புதுடில்லி:சரக்கு மற்றும் சேவை வரி வசூல், தொடர்ந்து இரண்டாவது மாதமாக, ஆகஸ்டிலும், 1 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.
இம்மாதத்தில் வசூல் 1.12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இது, கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடும்போது, 30 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், கடந்த ஜூலையில் 1.16 லட்சம் கோடி ரூபாய் வசூல் ஆகிஇருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்டில் ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல், 1 லட்சத்து 12 ஆயிரத்து 20 கோடி ரூபாய். இதில், மத்திய ஜி.எஸ்.டி., வசூல் 20 ஆயிரத்து 522 கோடி ரூபாய். மாநில ஜி.எஸ்.டி., வசூல் 26 ஆயிரத்து 605 கோடி ரூபாய். ஒருங்கிணைந்த வரி வசூல் 56 ஆயிரத்து 247 கோடி ரூபாய். மேலும் கூடுதல் வரியாக, 8,646 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:பொருளாதார வளர்ச்சி, வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கைகள், போலி ‘பில்’களுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை காரணமாக வசூல் அதிகரித்துள்ளது. வரவிருக்கும் மாதங்களிலும் வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|