பதிவு செய்த நாள்
16 செப்2021
19:46
மும்பை:மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘சென்செக்ஸ்’ நேற்று அதன் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் முதன் முறையாக 59 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’யும் 17 ஆயிரத்து 630 புள்ளிகள் எனும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.சந்தை உயர்வு கண்டதை அடுத்து, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 261 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நேற்றைய சந்தை உயர்வுக்கு, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.டி.சி., – ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க்’ ஆகிய நிறுவன பங்குகளின் விலை அதிகரித்ததும், அன்னிய முதலீடு தொடர்ந்து பெருகி வருவதும், ஐரோப்பிய சந்தைகளின் சாதகமான போக்கும் உதவிகரமாக இருந்தன.நேற்று சென்செக்ஸ் பிரிவில், ஐ.சி.ஐ.சி.ஐ., பங்கு விலை அதிகம் உயர்ந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|