பதிவு செய்த நாள்
17 செப்2021
20:24
மும்பை:பண்டிகை காலத்தை முன்னிட்டு, பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வீட்டுக்கடன் பிரிவில், அதன் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது.
டிசம்பர் 31ம் தேதி வரை செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், ‘சிபில் ஸ்கோர்’ உடன் இணைக்கப்பட்ட வீட்டுக் கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு, குறைந்தபட்ச வட்டி விகிதம் 6.70 சதவீதம். மேலும், இக்காலகட்டத்தில் பெறப்படும் வீட்டுக் கடன்களுக்கு, பரிசீலனை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வட்டிவிகிதம் எவ்வளவு கடன் வாங்கினாலும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், 75 லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்படும் வீட்டுக்கடனுக்கு, வட்டி 7.15 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.வட்டி குறைக்கப்பட்டதை அடுத்து, ஒரு வாடிக்கையாளர், 30 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் வகையில் 75 லட்சம் ரூபாய் கடன் பெற்றால், அவரால் 8 லட்சம் ரூபாய் வரை திருப்பிச் செலுத்துவதில் சேமிக்க முடியும்.
மேலும், மாத சம்பளம் வாங்காதவர்களுக்கு, 15 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகமாக இருந்தது. இது மாற்றப்பட்டு, மாத சம்பளம் பெறுபவர், பெறாதவர் என இரு தரப்புக்குமான வித்தியாசம் நீக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|