பதிவு செய்த நாள்
26 செப்2021
01:48
இரு மடங்கு
நடப்பாண்டு பண்டிகை காலத்தில், விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது நுகர்பொருட்கள் துறை. உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரிப்பால், நடப்பு ஆண்டில் இரு முறை பொருட்களின் விலையை உயர்த்தியது, ‘செமிகண்டக்டர்’ உள்ளிட்ட பாகங்களில் ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு, மூன்றாவது அலை குறித்த அச்சம் ஆகியவற்றையும் தாண்டி, விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின் சாதனங்கள்
உள்நாட்டு மின்சார சாதனங்களின் சந்தை, 12 சதவீத ஆண்டு வளர்ச்சி பெற்று, 2025ம் ஆண்டில் 5.33 லட்சம் கோடி ரூபாய் சந்தையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது இந்தியாவில் இந்த சந்தை 3.55 – 3.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு கொண்ட சந்தையாக இருக்கிறது. ஏற்றுமதியை பொறுத்தவரை, 96 ஆயிரத்து 200 கோடி ரூபாய் சந்தையாக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி
இந்தியா 2050ல் உலகின் மிகப்பெரிய இறக்குமதி நாடாக உருவெடுக்கும் என, பிரிட்டன் பன்னாட்டு வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது. உலக இறக்குமதியில், 5.9 சதவீத பங்குடன் சீனா, அமெரிக்கா ஆகியவற்றை அடுத்து, மூன்றாவது இடத்தில் இந்தியா இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்தியா, 2.8 சதவீத பங்குடன் உலகளவில் எட்டாவது பெரிய இறக்குமதி நாடாக இருக்கிறது.
ஏற்றுமதி
நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் 2.1 சதவீதம் அதிகரித்து, 10.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாகவும்; அடுத்து ஐரோப்பாவுக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவற்றில் பாதிக்கு மேற்பட்ட ஏற்றுமதி, தனியார் நிறுவனங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘செமிகண்டக்டர்’
உலக அளவிலான, ‘செமிகண்டக்டர்’ சந்தை, நடப்பு ஆண்டில் 17.3 சதவீத வளர்ச்சி பெறும் என, ஆய்வு நிறுவனமான ஐ.டி.சி., தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த சந்தை கடந்த ஆண்டில் 10.8 சதவீத வளர்ச்சியை பெற்றிருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த வளர்ச்சி, ‘மொபைல் போன்கள், நோட் புக்ஸ், சர்வர்கள், வாகனங்கள், அணி கருவிகள், கேமிங்’ உள்ளிட்டவற்றால் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|