பதிவு செய்த நாள்
29 செப்2021
19:58
புதுடில்லி:மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமான, ‘வீடா கிளினிக்கல் ரிசர்ச்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 831 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு வெளியீட்டின் போது, 331 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.
திரட்டப்படும் நிதியை கொண்டு கடனை அடைக்கவும், மூலதன செலவுகளுக்கும், ‘பயோநீட்ஸ் இந்தியா’ நிறுவனத்தை கையகப்படுத்தவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.அகமதாபாதைச் சேர்ந்த இந்நிறுவனம், 2004ல் ஒரு வணிக இடத்துடன் துவங்கி, இன்று நான்கு இடங்களை கொண்டுள்ளது.கடந்த நிதியாண்டில், இந்நிறுவனம் 196 கோடி ரூபாய் வருவாயையும்; 63 கோடி ரூபாய் நிகர லாபத்தையும் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|