பதிவு செய்த நாள்
07 அக்2021
21:41
பாரம்பரியம் மிக்க இந்தியாவின் சுகாதாரத் துறையில் முன்னோடியாகத் திகழும் 128 ஆண்டு நிறுவனமான அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் நிறுவனம் ஒலிம்பிக் சாதனையாளர்கள் மீராபாய் சானு மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோருடன், பிராண்ட் தூதர்களாக செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
1893-ம் ஆண்டு முதல் அமிர்தாஞ்சன், வலி மேலாண்மையில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. பல கோடிக்கணக்கான இந்தியர்களின் வலியை நீக்க உதவியுள்ளது. தற்போது, இந்த கூட்டுச் செயல்பாட்டின் மூலம் இந்த விளையாட்டு வீரர்களின் வெற்றி வரலாறுகள் மட்டுமல்லாமல் அவர்களின் கஷ்டங்களையும் விவரிக்கப்படும். இதன் மூலம் வலி நிவாரணத் தயாரிப்புகள் முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரப்படுத்தப்படும். கூட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக, அமிர்தாஞ்சனின் மேம்பட்ட முதுகு வலி ரோல்-ஆன், மூட்டு தசை ஸ்ப்ரே மற்றும் வலி நிவாரணிக்கான தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் விளம்பரங்கள் உள்ளிட்ட தொடர் விளம்பரங்களில் இந்த இரு விளையாட்டு வீரர்களும் பிராண்ட் தூதர்களாக இடம் பெறுவார்கள். இந்த தயாரிப்புகள் அனைத்தும் ஆரோக்கியம், அறிவியல் மற்றும் இயற்கையின் தனித்துவமான கலவை என்பதுடன் ஆயுர்வேதத்தின் வேர்களை வலுவான அடிப்படையாகக் கொண்டவையாகும்.
இந்தக் கூட்டுச் செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்த அமிர்தாஞ்சன் ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் எஸ்.சாம்பு பிரசாத், “அமிர்தாஞ்சன் நிறுவனம் இப்போது தனது பிரிவுகளை மேலும் வளர்ச்சி அடையச் செய்வதில் கவனம் செலுத்துகிறது. இது விஞ்ஞான மருத்துவ பரிசோதனைகளின் ஆதரவுடன் செயல்திறன் அடிப்படையிலான ஆதாரங்களுடன் கூடிய மிக உயர்ந்த வலி நிவாரணத் தயாரிப்புகளை வழங்குகிறது. பெருமைமிக்க இந்திய பிராண்டாக, உள்ள நாங்கள் ஒலிம்பிக் சாம்பியன்களை எங்கள் பிராண்ட் தூதர்களாக ஒப்பந்தம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். அவர்களை தூதர்களாக கொண்டு செயல்படுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|