பதிவு செய்த நாள்
22 அக்2021
21:57
புதுடில்லி:மின்னணு வர்த்தக தளமான ‘நைக்கா’ நிறுவனத்தை நடத்தி வரும், ‘எப்.எஸ்.என்., இ – காமர்ஸ் வெஞ்சர்ஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு 28ம் தேதி வர இருப்பதாக அறிவித்துள்ளது.
அழகு, ஆரோக்கியம் மற்றும் பேஷன் சம்பந்தப்பட்ட பொருட்களை, நைக்கா நிறுவனம் ‘ஆன்லைன்’ வாயிலாக விற்பனை செய்து வருகிறது.‘செபி’ அனுமதி வழங்கியதை அடுத்து, இந்நிறுவனம் அக்டோபர் 28 முதல், நவம்பர் 1ம் தேதி வரை புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. ஒரு பங்கின் விலை 1,085 – 1,125 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பங்கு வெளியீட்டின் போது, 630 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. மேலும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்களின் 4.19 கோடி பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.மும்பையைச் சேர்ந்த இந்நிறுவனம், கடந்த 2012ல் துவங்கப்பட்டது. கடந்த நிதியாண்டில் 61.9 கோடி ரூபாயை நிகர லாபமாக நைக்கா ஈட்டியுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|