முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் மாண்டவியா அழைப்பு முதலீட்டாளர்களுக்கு மத்திய அமைச்சர் மாண்டவியா அழைப்பு ... லாக் டவுனிற்குப் பிறகு சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள் : தாம்ஸ்குக் ஆய்வில் தகவல் லாக் டவுனிற்குப் பிறகு சுற்றுலாவை விரும்பும் இந்தியர்கள் : தாம்ஸ்குக் ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மூன்று சக்கர மின்சார வாகனம் ‘யூலர்’ நிறுவனம் அறிமுகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2021
20:26

புதுடில்லி:மின்சார வாகனங்களை தயாரிக்கும், ‘யூலர் மோட்டார்ஸ்’ நிறுவனம், மூன்று சக்கர மின்சார சரக்கு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

நம் நாட்டில் இயங்கும் யூலர் மோட்டார்ஸ் நிறுவனம், மூன்று மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், சரக்குகளை ஏற்றிச் செல்ல ஏதுவாக, ஹைலோட் ஈ.வி., எனும் மூன்று சக்கர மின்சார வாகனத்தை, இந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.இந்த ஹைலோட் ஈ.வி., வாகனம், கடந்த, மூன்று ஆண்டுகளாக, 10 கி.மீ., வரை இயக்கப்பட்டு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.

இது, 3.5 லட்சம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்திற்கான முன்பதிவு துவங்கிவிட்டதாகவும், டில்லி மற்றும் குருகிராமில் உள்ள நிறுவன மையங்களுக்கு நேரில் சென்றோ அல்லது நிறுவனத்தின் இணையதள பக்கத்தின் வாயிலாகவோ, 999 ரூபாய் செலுத்தி, வாகனத்தை முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை ‘சார்ஜ்’ செய்தால் 151 கி.மீ., வரை இயங்கும் வகையில், இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. 688 கிலோ வரையிலான சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக எடையிலான சரக்குகளை ஏற்றும் திறன் உடைய முதல் மூன்று சக்கர சரக்கு வாகனம் இதுவே ஆகும்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)