பதிவு செய்த நாள்
09 நவ2021
20:29
‘டைனர்ஸ் கிளப்’ தடை நீக்கம்‘
டைனர்ஸ் கிளப் இன்டர்நேஷனல்’ நிறுவனம், புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, ரிசர்வ் வங்கி நீக்கி அறிவித்துள்ளது. தரவுகள் சேமிப்பு விஷயத்தில் விதிகளை பின்பற்றாததால், இந்நிறுவனத்துக்கு, புதிய உள்நாட்டு வாடிக்கையாளர்களை சேர்க்க, கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி முதல் ரிசர்வ் வங்கி தடை விதித்திருந்தது.
‘கோக கோலா’ லாபம் சரிவு
பிரபல குளிர்பானங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘கோக கோலா இந்தியா’ நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த நிதியாண்டில் 28.4 சதவீதம் அளவுக்கு சரிந்து, 443.4 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில், நிகர லாபம் 619.14 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
‘ரூபே’ டெபிட் கார்டுகள்‘
பிரதமர் ஜன் தன் யோஜனா’ வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, வங்கிகள் 31.67 கோடி ‘ரூபே’ டெபிட் கார்டுகளை, இலவச விபத்து காப்பீடுடன் வழங்கி இருக்கின்றன.இத்திட்டம் துவங்கப்பட்ட ஆகஸ்ட் 2014ல் இருந்து இதுவரை, 43.76 கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘டாடா மோட்டார்ஸ்’ கூட்டு‘
டாடா மோட்டார்ஸ்’ நிறுவனம், வாடிக்கையாளர்களின் வாகன நிதி வசதிக்காக, ‘பேங்க் ஆப் இந்தியா’ உடன் கூட்டு சேர்ந்துள்ளது.இதனையடுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளருக்கு, மிக குறைந்த வட்டி விகிதமான 6.85 சதவீதத்திலிருந்து, கடன் வசதி வழங்கப்படுகிறது.
‘மேரு’வை கைப்பற்றிய மகிந்திரா‘
மகிந்திரா லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம், ‘மேரு கேப்ஸ்’ நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.மேரு கேப்ஸ் நிறுவனம், கடந்த 2006ம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்நிறுவனத்திடம் கணிசமான அளவில் மின்சார வாகனங்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|