பதிவு செய்த நாள்
03 டிச2021
21:11
‘ஸ்நாப்டீல்’ நிறுவனம் முயற்சி
மின்னணு வர்த்தகம் செய்யும் ‘ஸ்நாப்டீல்’ நிறுவனம், பங்கு வெளியீட்டு சந்தையில் நுழைவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு விண்ணப்பிக்க உள்ளது. டில்லியை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், 2010ம் ஆண்டில் துவக்கப்பட்டது.புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,875 கோடி ரூபாய் நிதியை திரட்ட இந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
கோவாவில் நடைபெறும் கூட்டம்
மின்சார வாகனத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவது சம்பந்தமான சந்திப்பு, இன்று கோவாவில் நடைபெற உள்ளது.இதில், மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே மற்றும் பல்வேறு மாநில போக்குவரத்து துறை அமைச்சர்கள், உயரதிகாரிகள், வாகன தொழில்துறை தலைவர்கள் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
‘ஜெட் ஏர்வேஸ்’ மும்முரம்
அடுத்த ஆண்டிலிருந்து மீண்டும் விமான சேவையை துவக்க திட்டமிட்டுள்ள ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனம், புதிய விமானங்களை வாங்கவும், குத்தகைக்கு எடுக்கவும் ‘போயிங் மற்றும் ஏர்பஸ்’ நிறுவனங்களுடன் நடத்தி வரும் பேச்சில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.இதையடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை, நேற்று மும்பை பங்குச் சந்தையில், 5 சதவீதம் அளவுக்கு உயர்வைக் கண்டது.
அர்ஜென்டினாவில் ‘ஹீரோ மோட்டோகார்ப்’
முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘ஹீரோ மோட்டோகார்ப்’ தனது சந்தையை அர்ஜென்டினாவிலும் விஸ்தரிக்கிறது.இந்நிறுவனம், அர்ஜென்டினாவில் உள்ள ‘கிலேரா மோட்டார்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, தன்னுடைய தயாரிப்புகளை அங்கே சந்தைப்படுத்த உள்ளது.
அமெரிக்காவுக்கு அதிக ஏற்றுமதி
கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், இந்தியாவிலிருந்து அதிகளவிலான ஏற்றுமதி, அமெரிக்காவுக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இக்காலகட்டத்தில், அமெரிக்காவுக்கு 5.06 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|