பதிவு செய்த நாள்
07 டிச2021
10:42
மும்பை : ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு கூட்டம் நேற்று துவங்கியிருக்கும் நிலையில், ‘ஒமைக்ரான்’ உள்ளிட்ட காரணங்களால், வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என, நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான பணக்கொள்கை குழு கூட்டம், 6ம் தேதி துவங்கி, 8ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.நாளை இக்கூட்டத்தின் முடிவில், வட்டிவிகிதம் குறித்த குழுவின் முடிவு அறிவிக்கப்படும்.இந்நிலையில், ‘எஸ்.பி.ஐ., ரிசர்ச்’ அறிக்கை, ‘கோட்டக் எக்கனாமிக் ரிசர்ச்’ அறிக்கை போன்றவை இம்முறை ரெப்போ வட்டிவிகிதம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளன.
ஒமைக்ரான் பரவல் மற்றும் பாதிப்பு குறித்து தெளிவாக தெரியும் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதால், ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை என அவை கருதுகின்றன.அதேசமயம், சொத்து ஆலோசனை நிறுவனமான ‘அனராக்’ உள்ளிட்டவை, ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாவிட்டாலும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் சற்று உயர்த்தப்பட வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|