வருமான வரி தாக்கல் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் வருமான வரி தாக்கல் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் ...  வருமான வரி கணக்கு தாக்கல்  வழி காட்டுகிறது ‘டேக்ஸ்2வின்’ வருமான வரி கணக்கு தாக்கல் வழி காட்டுகிறது ‘டேக்ஸ்2வின்’ ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2021
10:55


புது முயற்சியில் ‘அலிபாபா’

அண்மைக் காலமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வரும், சீனாவை சேர்ந்த ‘அலிபாபா குழுமம்’, அதன் மின்னணு வர்த்தக பிரிவை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு சந்தைகளில் மின்னணு வர்த்தக வணிகத்தை கையாள, பன்னாட்டு டிஜிட்டல் வர்த்தக குழு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.



‘டாடா பவர்’ ஒப்பந்தம்

‘ஐ.ஐ.டி. , மெட்ராஸ்’ உடன், ‘டாடா பவர்’ நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஆலோசனை, பயிற்சி, தொழில்நுட்ப தீர்வுகள் ஆகியவற்றுக்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறைந்த செலவிலான பசுமை எரிசக்தி தீர்வு குறித்து, இதுவரை டாடா பவர் நிறுவனம், அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் வாயிலாக, நூற்றுக்கும் மேற்பட்ட, தேசிய சர்வதேச அளவிலான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.



இந்தியாவுக்கு நான்காவது இடம்

அன்னிய செலாவணி கையிருப்பை பொறுத்தவரை, உலகளவில், அதிக இருப்பை வைத்திருக்கும் நாடுகளில், இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது.

கடந்த நவம்பர் 19ம் தேதி நிலவரப்படி, நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு 48.03 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.



2.13 லட்சம் ஏ.டி.எம்.,கள்

கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 2.13 லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஏ.டி.எம்.,கள் உள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இவற்றில் கிட்டத்தட்ட 47 சதவிகித ஏ.டி.எம்.,கள், கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகர பகுதிகளில் அமைந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.



எல்.ஐ.சி., வருவாய் அதிகரிப்பு

கடந்த நிதியாண்டில், பங்கு சந்தை உள்ளிட்டவற்றில் செய்த முதலீட்டின் வாயிலான வருவாய், 16.66 சதவீதம் அதிரித்துள்ளதாக, விரைவில் பங்கு வெளியீட்டுக்கு வர இருக்கும் எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த நிதியாண்டில் பிரீமியம் வருவாய், அதற்கு முந்தைய நிதியாண்டை விட 6.33 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.



திவால் நடவடிக்கைக்கு அனுமதி

அனில் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் கேப்பிட்டல்’ நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கைகளை தொடங்குவதற்வதற்கான ரிசர்வ் வங்கியின் மனுவை, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், கிட்டத்தட்ட 19 ஆயிரத்து, 805 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)