பதிவு செய்த நாள்
07 டிச2021
21:13
சென்னை:நிலுவை தொடர்பாக சுவிஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமான சேவை நிறுவனமான, ஸ்பைஸ்ஜெட், சுவிட்சர்லாந்தின் எஸ்.ஆர்.டி., டெக்னிக்ஸ் நிறுவனத்திடம் விமான பராமரிப்புக்காக ஒப்பந்தம் செய்தது.
இந்நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தர வேண்டிய, 175 கோடி ரூபாய் நிலுவை தொடர்பாக, எஸ்.ஆர்.டி., டெக்னிக்ஸ் சார்பில் கிரெடிட் சூசி ஏ.ஜி., நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மத்தியஸ்தரை நியமித்து, நிலுவைக்கு தீர்வு காண உத்தரவிட்டது.
ஆனால், ஸ்பைஸ்ஜெட் உறுதி அளித்தபடி நிலுவையை தரத் தவறியதால், அதன் சொத்துக்களை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை வாங்கியுள்ளதாக, ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்புக்கு தெரிவித்துள்ளது. மூன்று வாரங்களில் நிலுவையை திரும்பத் தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஸ்பைஸ்ஜெட் கூறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|